அஸ்வருக்கு மண்ணுக்குள் புதைப்பதாக கொலை அச்சுறுத்தல்!

தனக்கு மரண அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக முன்னாள் முஸ்லீம் விவகார அமைச்சர் ஏ.எச்.எம். அஸ்வர் தங்காலை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு ஒன்றை பதிவு செய்துள்ளார்.

கொலை செய்து எரித்து மகிந்த ராஜபக்சவின் மதப்படி மண்ணுக்குள் புதைப்பதாக தொலைபேசியூடாக தனக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாக அஸ்வர் கூறியுள்ளார். 

தனது கையடக்கத் தொலைபேசிக்கு பல தடவைகள் இலக்கம் ஒன்றிலிருந்து இவ்வாறு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் இந்த அச்சுத்தலைமுஸ்லீம் ஒருவரே விடுப்பதாக தான் சந்தேகிப்பதாகவும் அஸ்வர் குறிப்பிட்டுள்ளார். 

தற்போது தென் மாகாணத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜகபக்சவுக்கு ஆதரவாக தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் அஸ்வர் ஈடுபட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -