11பக்க கவிதையுடன் ராஜினாமா கடிதத்தினை ஒப்படைத்தார் -ஜனக பண்டார

அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் பதவியை ராஜினாமா செய்துள்ளார். மாகாணசபைகள் மற்றும் கிராமிய அபிவிருத்தி அமைச்சர் ஜனக பண்டார தென்னக்கோன் தனது அமைச்சர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.

மொத்தமாக 11 கவிதைகள் உள்ளடங்களாக இந்த இராஜினாமா கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் தாம் பதவி விலகுவதாக இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியாரே நான் இதனைச் சொல்கின்றேன் மக்கள் மத்தியில் என்னை ஆசுவாசப்படுத்திக் கொள்கிறேன் பயணம் இல்லாததனால் நிற்கின்றேன் இவ்வாறுஏற்றுக் கொள்ளுங்கள் என் இராஜினமாவை நீங்கள் என எழுதியுள்ளார்.
 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -