நிந்தவூர் விளையாட்டுக் கழகங்களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைப்பு!

யு.எல்.எம். றியாஸ்,சுலைமான் றாபி-

நிந்தவூர் பிரதேசத்தில் உள்ள விளையாட்டுக் கழகங்களின் திறமைகளை மேம்படுத்தி தேசிய ரீதியில் பிரகாசிக்கச்செய்யும் வகையில் முன்னெடுக்கப்படும் வேலைத்திட்டத்திற்கமைய விளையாட்டு உபகரணங்கள் வழங்கிவைக்கப்பட்டது.

திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிமின்சொந்த நிதியில் இருந்து 13 விளையாட்டுக் கழகங்களுக்கான விளையாட்டு உபகரணத் தொகுதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டது. நிந்தவூர் விளையாட்டு அபிவிருத்தி மற்றும் சமூக சேவைகள் ஒருங்கமைப்பின்ஏற்பாட்டில் இவ் வைபவம் இடம்பெற்றது.

ஒருங்கமைப்பின் தலைவர் ஐ.எல்.எம். இப்ராஹீம் தலைமையில் நிந்தவூர் அல் - மஷ்ஹர் பெண்கள் உயர்தரப் பாடசாலை அஸ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் இடம்பெற்ற வைபவத்தில் திகாமடுல்ல மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் பைசால் காசிம் பிரதம அதிதியாக கலந்துகொண்டு விளையாட்டு உபகரணத் தொகுதிகளை வழங்கி வைத்தார்.

இவ் வைபவத்தில் தேசிய ரீதியில் கிரிக்கெட் போட்டிகளில் தங்கப் பதக்கங்கள்
வென்ற நிந்தவூர் விளையாட்டுக் கழகங்களின் வீரர்களுக்கு நினவுச்சின்னம்களும் வழங்கி கெளரவிக்கப்பட்டது.

இவ் வைபவத்தில் உலமாக்கள் , விளையாட்டு துறை சார் உத்தியோகத்தர்கள்
கல்விமான்கள் , அரசியற் பிரமுகர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -