மஹிந்த ராஜபக்ச தரப்பினர் அவசர கூட்டம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தரப்பினர் அவசர கூட்டமொன்றை இன்று நடத்தவுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்பு மனு வழங்குவதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்தை மாற்றியமைக்கவுள்ளதாக வெளியான தகவல்களை தொடர்ந்து இந்த அவசர பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளது.

மேல் மாகாண முதலமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் வீட்டில் இப்பேச்சுவார்த்தை நடத்தப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுக்கு வேட்பு மனு வழங்கவில்லை என ஜனாதிபதி மைத்திரிபால தெரிவித்தமையை தொடர்ந்து அடுத்த கட்ட நகர்வுகள் தொடர்பில் இன்றைய பேச்சுவார்த்தை நடத்தப்பட உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.

ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டணியில் உள்ள மஹிந்த தரப்பினர் குறித்த கூட்டத்தில் கலந்து கொள்ளவுள்ளனர் என தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -