குருநாகலில் மு.கா சார்பாக ஒரு வேட்பாளர் - ரணில் இணப்பாட்டு

இக்பால் அலி-

ம்முறை பொதுத் தேர்தலில் குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஒரு வேட்பாளரை மட்டும் நிறுவத்துவதற்கு ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரனில் விக்கிரமசிங்க இணப்பாட்டுக்கு வந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஏனைய மாவட்டங்களில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்காக ஸ்ரீலங்கா முஸ்லிம் காரஸ்கிரஸ் சார்பாக வேட்பாளர்களை நிறுத்தும் விடயத்தில் கருத்து முரண்பாடுகள் நிலவுகின்ற சந்தர்ப்பத்தில் குருநாகல் மாவட்டத்திலுள்ள வடமேல் மாகாண சபை உறுப்பினர் ரிஸ்வி ஜவஹர்ஷாவுக்கு மட்டும் வேட்பாளராக களமிறக்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

ஐக்கிய தேசியக் கட்சியிலுள்ள ஒரு வேட்பாளரையோ அல்லது வேறு சிறு கட்சிகளிலுள்ள முஸ்லிம் வேட்பாளரையோ இம்மாவட்டத்தில் களமிறங்க அனுமதியளிக்கப்பட வில்லை என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அந்தவகையில் இம்முறை குருநாகல் மாவட்டத்தில் நீண்ட காலத்திற்குப் பின் ஐக்கிய தேசியக் கட்சியில் ஒரு முஸ்லிம் பாராளுமன்றப் பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக் கொள்ளக் கூடிய சந்தர்ப்பம் கிட்டியுள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -