பி.எம்.எம்.ஏ.காதர்-
மருதமுனை ஈஸ்டன் யூத் விளையாட்டுக் கழகத்தின் வருடாந்த இப்தார் நிகழ்வு இன்று சனிக்கிழமை(04-07-2015) மருதமுனை மசூர்மௌலானா விளையாட்டு மைதானத்தின் உள்ளக அரங்கில் கழகத்தின் தலைவரும்,கல்முனை மாநகர சபை உறுப்பினருமான எம்.எஸ்.உமர் அலி தலைமையில் நடைபெற்றது.
மாலை 5.45 மணி தொடக்கம் இப்தார் நேரம் வரை அட்டாளைச்சேனை ஆசிரியர் பயிற்சிக் கலாசாலை விரிவுரையாளர் அஷ்;-ஷெய்க்; எப்.எம்.அகமதுல் அன்ஸார் மௌலானா எம்.ஏ.(நழிமி)அவர்களின் விஷேட இப்தார் சொற்பொழிவு இடம் பெற்றது.
கழகத்தின் பொதுச் செயலாளர் ஏ.எம்.இப்றாகீம் அவர்களின் நெறிப்படுத்தலில் நீதிபதிகள். சட்டத்தரணிகள், டாக்டர்கள், அதிபர்கள், அசிரியர்கள். விளையாட்டுக் கழகங்களின் பிரதிநிதிகள் விளையாட்டு வீரர்கள் உள்ளீட்ட பலர் கலந்து கொண்டனர்.