அ.இ.ம.கா அம்பாறையில் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக் முயற்சி - ஹரீஸ் காட்டம்..!

எம்.வை.அமீர் -

டக்கவிருக்கின்ற பாராளமன்ற தேர்தலில் அம்பாறைமாவட்ட முஸ்லிம் மக்களின் ஒற்றுமையைக்குலைத்து இங்கு இதுவரையும் இருந்துவரும் முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை இல்லாதொழிக்கும் முயற்சியில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஈடுபடுவதாகவும் அதற்க்கு முஸ்லிம்காங்கிரஸ் ஒருபோதும் இடமளிக்காது என்றும் ஐக்கிய தேசிய முன்னணியில், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிடும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் தெரிவித்தார்.

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் முஸ்லிம்களின் பிரதிநித்தித்துவத்தை தக்கவைத்துக் கொள்வதற்காக வகுத்துள்ள வியூகங்கள் மற்றும் தேர்தல் நடவடிக்கைகள் தொடர்பில் பத்திரிகையாளர்களுக்கு தெளிவூட்டும் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்று சாய்ந்தமருது சீ பிரீஸ் வரவேற்பு மண்டபத்தில் 2015-07-20 ல் இடம்பெற்றது.

குறித்த பத்திரிகையாளர் மாநாட்டில் முஸ்லிம்காங்கிரஸின் தேர்தல் வியூகத்தின் ஊடாக மூன்று பாராளமன்ற உறுப்பினர்களை பெறும் நோக்கில் களமிறக்கப்பட்டுள்ள முன்னாள் பாராளமன்ற உறுப்பினகளான எச்.எம்.எம்.ஹரீஸ், பைசால் காசீம் மற்றும் கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர் ஆகியோர் கலந்து பத்திரிக்கையாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தனர்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த எச்.எம்.எம்.ஹரீஸ், அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் பிரதிநிதிதத்துவத்தை காவுகொடுக்க சதிவலைபின்னும் சதிகாரர்களின் முயற்ச்சிகளை எதிர்காலத்தில் மக்களுக்கு தெளிவூட்டவுள்ளதாகவும் முஸ்லிம் காங்கிரசுக்கு எதிரானவர்களின் எண்ணம் ஈடேறாது என்றும் தெரிவித்தார்.

சாய்ந்தமருதுக்கான உள்ளுராட்சி சபையை முஸ்லிம் காங்கிரஸ் பெற்றுக்கொடுக்கும் என்று தெரிவித்த ஹரீஸ் அதற்க்கான பூர்வாங்க நடவடிக்கைகளை முஸ்லிம் காங்கிரஸ் எடுத்துள்ளதாகவும் குறித்த உள்ளுராட்சி சபையை முஸ்லிம் காங்கிரசினால் மட்டுமே பெற்றுக்கொடுக்க முடியும் என்றும் தெரிவித்தார்.

முஸ்லிம் காங்கிரசுக்கு எதிராக களமிறங்கியுள்ளவர்கள் பற்றி குறிப்பட்ட முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் ஹரீஸ் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் முதன்மை வேட்பாளர் அப்துல் மஜீத் வேட்புமனுவில் கையொப்பம் வைப்பதற்கு ஒரு நாளைக்கு முதல் கூட ஸ்ரீகோதாவில் ஐக்கிய தேசிய முன்னணியில் தனது பெயரை போடுவதற்காக காத்துக் கொண்டிருந்தவர் என்றும் அவருக்கு அங்கு இடம் கிடைக்கத்தான் காரணமாகவே கொள்கையின்றி அகில இலங்கை மக்கள் காங்கிரஸில் இணைந்து கொண்டுள்ளதாகவும் தெரிவித்தார். இக்கட்சியில் போட்டியிடுபவர்கள் தங்களுக்கு சவாலானவர்கள் அல்ல என்று தெரிவித்த ஹரீஸ், முஸ்லிம்காங்கிரஸின் தேர்தல் வியூகத்தின் கீழ் கட்சியால் பிரேரிக்கப்பட்டுள்ள மூன்று வேட்பாளர்களும் எதிர்வரும் தேர்தலில் உறுதி என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.

ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த கிழக்குமாகாண சபை உறுப்பினர் ஏ’எல்.எம்.நஸீர் அட்டாளைச்சேனைக்கு தேசியப்பட்டியல் பாராளமன்ற உறுப்புரிமையை கட்சி வழங்க சம்மதித்துள்ளதாகத் தெரிவித்தார்.நிந்தவூர் முன்னாள் தவிசாளர் கட்சிக்குள் கட்டுக்கோப்புடன் செயற்படுவார் என்றும் நிந்தவூர் மக்கள் பிரதிநிதித்துவத்தை இழக்க விரும்ப மாட்டார்கள் என்றும் முன்னாள் பாராளமன்ற உறுப்பினர் பைசால் காசீம் தெரிவித்தார். கிழக்குமாகாண சுகாதார அமைச்சர் எம்.ஐ.எம்.மன்சூர்`கருத்துத் தெரிவிக்கையில் கட்சியின் வியூகத்தை வெல்வதற்காக பல்வேறு தரப்பினரையும் சந்தித்து ஆதரவு திரட்டிவருவதாகவும் ஸ்ரீலங்கா முஸ்லிம்காங்கிரஸின் வேட்பாளர்களின் வெற்றி உறுதி என்றும் தெரிவித்தார். ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளித்த மன்சூர் ஊழியர்களின் நியமனங்கள் தொடர்பில் கிழக்குமாகாண சுகாதார அமைச்சு நீதியாக செயற்படும் என்றும் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -