தேர்தலின் போது பேரணிகள் நடத்த முடியாது - பொலிஸ் ஊடகப் பேச்சாளர்

திர்வரும் பொதுத் தேர்தலுக்கான வேட்பு மனுக்களை தாக்கல் செய்யும் கடைசி தினத்தில் பேரணிகளை நடத்த முழுமையாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர தெரிவித்துள்ளார். 

இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

பொலிஸாரின் உத்தரவை மீறி பேரணி செல்வது சட்ட விரோதமான ஒரு செயலாகும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

எனவே, இவ் உத்தரவை மீறி வேட்பு மனுவை தாக்கல் செய்யும் கடைசி தினத்தில் அதாவது 13ஆம் திகதி பேரணிகளை நடத்துபவருக்கு எதிராக பாராபட்சம் பார்க்காமல் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்வரும் 6ம் திகதி முதல் 13ம் திகதி வரையில் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -