இதேவேளை, அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜ§ன ரணதுங்க மற்றும் எம்.கே.டி. எஸ் குணவர்தன ஆகியோர் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பில் போட்டியிடவுள்ளனர் என்றும் தெரியவருகின்றது. இந்நிலையில், ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் நாளை வெள்ளிக்கிழமையும் எதிர்வரும் திங்கட்கிழமையும் வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்படவுள்ளன. வடக்கு, கிழக்கு மாகாணங்கள் உள்ளிட்ட 22 மாவட்டங்களிலும் ஐக்கிய தேசியக்கட்சி இம்முறை யானைச் சின்னத்தில் களமிறங்குகின்றது. இது இவ்வாறிருக்க ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் போட்டியிடவிருக்கின்றவர்கள் வேட்பு மனுக்களில் இன்று வியாழக்கிழமை கைச்சாத்திடவுள்ளனர்.
கொழும்பு, மஹாவலி கேந்திர நிலையத்தில் வைத்தே இன்றுகாலை 9 மணிமுதல் முன்னெடுக்கப்படவிருப்பதாக அறியமுடிகின்றது. இந்த தேர்தலில் சபாநாயகர் சமல் ராஜபக்ஷ , ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பின் சார்பில் ஹம்பாந்தோட்டை மாவட்டத்தில் போட்டியிடவிருப்பதாக தெரியவருகின்றது. TM
