(அம்பாறை) ACMC சார்பாக அன்வர் முஸ்தபா,சிராஸ்,நதீர்,மஜீத்,இஸ்மாயில்,சமீர் வேட்புமனுவில் கைச்சாத்திட்டனர்!

ம்பாறை மாவட்டத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தனது மயில் சின்னத்தில் களமிறங்க தயாராகி வருகிறது. 

அதன் அடிப்படையில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சார்பில் வேட்பாளர்களாக கட்சியின் செயலாளர் வை.எல்.சாகுல் ஹமீத் முன்னிலையில் ,கட்சியின் சர்வதேச விடயங்களுக்கான பணிப்பாளர் அன்வர் முஸ்தபா, பிரதி தேசிய அமைப்பாளர் சிராஸ் மீராசாஹிப் ,கிழக்கு மாகாண இணைப்பாளர் சித்தீக் நதீர், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் அப்துல் மஜீத், SEUSL முன்னால் உபவேந்தர் மு.இஸ்மாயில், அட்டாளைச்சேனை பிரதேசத்தை சேர்ந்த அல்- ஹாஜ் ஏ.சீ.எம் சமீர், அக்கறைப்பற்று பிரதேசத்தை சேர்ந்த நபில் ஆகியோர் இதுவரை வேட்புமனுவில் ஒப்பமிட்டுள்ளதாகவும். 

கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எம் ஜெமீல் அவர்கள் இதுவரை வேட்புமனுவில் ஒப்பமிட வில்லை எனவும் , ஆரிப் சம்சுதீன் அவர்களுக்கு ACMC யில் ஆசனம் வழங்கப்படும் என்பது வெறும் வதந்தியான செய்தி எனவும் தெரியவருகின்றது.

கல்முனை பிரதேசத்தை சேர்ந்த பெஸ்டோர் ரியாசுக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -