எம்.எம்.ஜபீர்-
கல்முனைக்குடி அல்-மஸ்துல் நூராணியா தைக்கா பள்ளிவாசலுக்கு எதிர்வரும் புனித ரமழானை முன்னிட்டு மத்ரஸா மாணவர்களுக்கு அல்-குர்ஆன் பிரதிகள் நேற்று வழங்கி வைக்கப்பட்டன.
அல்-மஸ்துல் நூராணியா தைக்கா பள்ளிவாசல் தலைவர் ஏ.எம்.ஹனீபா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் அதிதியாக கலந்து கொண்டு மாணவர்களுக்கு அல்-குர்ஆன் பிரதிகளை வழங்கி வைத்தார்.
இந்நிகழ்வில் பள்ளிவாசல் இமாம், மௌலவி மார்கள், மாணவர்கள், பிரதேசவாசிகள் என பலரும் கலந்துகொணடனர்.
இதேவேளை புனித ரமழானை முன்னிட்டு பள்ளிவாசலுக்கு புனர்நிர்மானத்திற்கு கூரைகள் வழங்கப்பட்டதாகவும் இதற்கு அல்-மஸ்துல் நூராணியா தைக்கா பள்ளிவாசல் நிர்வாகம் அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூரிற்கு தமது நன்றிகளையும் தெரிவித்துள்ளனர்.


