கொழும்பு மாநகரசபையின் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் மொஹமட் ஹனாஸ், எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் பிரியந்த லியனகேயின் உத்தரவுக்கு அமைய அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கொழும்பு, கொம்பனி வீதியில், சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் மாநகர சபை உறுப்பினரை கடந்த 30ஆம் திகதி கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்தார்.
இதனையடுத்து மாநகர சபை உறுப்பினரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை(01) ஆஜர்படுத்தியபோது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
ச
