முஸ்லிம் காங்கிரஸ் உறுப்பினர் ஹனாஸ்க்கு விளக்கமறியல்!

கொழும்பு மாநகரசபையின் முஸ்லிம் காங்கிரஸின் உறுப்பினர் மொஹமட் ஹனாஸ், எதிர்வரும் 15ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்ற நீதவான் பிரியந்த லியனகேயின் உத்தரவுக்கு அமைய அவர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு, கொம்பனி வீதியில், சில மாதங்களுக்கு முன்னர் இடம்பெற்ற கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகத்தின்பேரில் மாநகர சபை உறுப்பினரை கடந்த 30ஆம் திகதி கைது செய்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் உதவி பொலிஸ் அத்தியட்சகருமான ருவான் குணசேகர தெரிவித்தார்.

இதனையடுத்து மாநகர சபை உறுப்பினரை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று திங்கட்கிழமை(01) ஆஜர்படுத்தியபோது, அவரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -