ஒரே உலகம் ஒரு சுற்றாடல் என்ற தொனிப்பொருளில் கல்பிட்டி கோட்ட மட்ட பாடசாலை சுற்றாடல் முன்னோடி படையணி மாணவர்களின் பாதையாத்திரை மிக விமர்சையாக கடற்படை முகாமில் இருந்து ஆரம்பித்து கோட்ட கல்வி காரியாலயத்தில் இனிதே நிறைவு பெற்றது.
கல்பிட்டி கோட்ட கல்விப் பணிப்பாளர் திருமதி தீப்தி அவர்களும் வலய மட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் எம். சாபி அவர்களும் கல்பிட்டி கோட்ட சுற்றாடல் முன்னோடி ஆணையாளர் எச்.எம். சுகைப் அவர்களும் எம். பழில் ஆசிரிய ஆலோசகர் அவர்களும் இப் பாதையாத்திரையை ஒழுங்கு படுத்தியமை குறிப்பிடதக்கது
சப்றாஸ்
(புத்தளம் நிருபர்)






