சுற்றுச்சூழலை அசுத்தப்படுத்துவோருக்கு எதிராக சட்டவடிக்கை -அமைச்சர் ஹக்கீம்
கொழும்பு நகரிலும், சூழவுள்ள பிரதேசங்களிலும் பூங்காக்களையும், பொழுதுபோக்கு இடங்களையும், நீர் நிலைகளையும் சுத்தமாக வைத்துக்கொள்வது சம்பந்தமாகவும், அவற்றை அசுத்தப்படுத்துவோருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்காகவும் நகர அபிவிருத்தி சபை, இலங்கை காணி மீட்பு அபிவருத்தி கூட்டுத்தாபனம், மாநகர சபைகள் உட்பட பிரதேச உள்ளுராட்சி அமைப்புக்களின் உயரதிகாரிகள், முப்படையினர், சுற்றாடல் பொலீஸ் உயரதிகாரிகள் ஆகியோருடன் நகர அபிவிருத்தி, நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவருமான ரவூப் ஹக்கீம் மீண்டுமொரு கலந்துரையாடலை செவ்வாய்கிழமை (09) தமது அமைச்சில் நடாத்தினார். அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் கருணாசேன ஹெட்டிஆராச்சி, மேலதிகச் செயலாளர் பொறியியலாளர் பீ.சுரேஷ், நகர அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் நயன மாவில்மட ஆகியோரும் பங்குபற்றினர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
