الســـــــــــلام عليــــكم ورحمــــــة الله وبركاتــــــــــه ،،،،،
தொழில் நிமித்தம் கடல் கடந்து வாழும் இஸ்லாமிய நெஞ்சங்களுக்கு வாராந்தம் கட்டாரில் இயங்கும் ஸ்ரீலங்கா இஸ்லாமிய தஃவா நிலையத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் பயான் நிகழ்ச்சி 04-06-2015 இன்று வியாழக்கிழமை இரவு 08.45 மணிக்கு கட்டார் அல்மனார் டவருக்கு பின்னால் அமைந்துள்ள மஸ்ஜித் அப்துல் அஸீஸ் அல் கஷ்ஷாபில் நடைபெறவுள்ளது.
கத்தார் வாழ் இஸ்லாமிய சகோதர சகோதரிகளுக்கு இஸ்லாத்தை அறிந்து கொள்ள ஓர் அறிய வாய்ப்பு !!!
ஒவ்வொரு வியாழன் தோறும் மாலை 8:45 முதல் 10:00 வரை நபிகளார் வாழ்க்கை வரலாறுத் தொடர் மற்றும் மிகவும் பிரயோசனமான தலைப்புகளில் சொற்பொழிவுகள் நடைபெற்று வருகின்றன.
இன்ஷா அல்லாஹ் இவ்வாரம் "தளர்ந்து விடாதீர்கள் கவலைப்படாதீர்கள் ஈமான் கொண்டிருந்தால் நீங்களே உயர்ந்தவர்கள்" என்ற தலைப்பில் பிரதான உரை நடைபெறும்.
இவ் விஷேட மார்க்க சொற்பொழிவை அஷ்ஷெய்க் இத்ரீஸ் ஹஸன் (ஸஹ்வி)
நிகழ்த்துவார்.
அனைத்து சகோதர சகோதரிகளும் இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்டு நம் இஸ்லாமிய அறிவையும் ஈமானிய பலத்தையும் வளர்த்துகொள்ள வருமாறு அன்புடன் அழைக்கின்றோம். இத்தகவலை நண்பர்கள் / தெரிந்தவர்களுக்கும் பகிர்ந்துகொள்வோம்.
பெண்களுக்கும்,சிறுவர்களுக்கும் விஷேட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
