தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கல்முனை காரியாலயத்தின் குறைபாடுகளை கண்டறியும் பொருட்டு நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் நேற்று நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கல்முனை காரியாலயத்திற்கு விஜயம் செய்தார்.
இதன்போது தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபையின் கல்முனை காரியாலயத்தின் பொறுப்பதிகாரி எம்.ஐ.முனவ்வரிடம் கல்முனை பிரதேசத்தில் நீர் வழங்குதலில் ஏற்படும் தடங்கல்கள் மற்றும் பிரச்சினைகள் தொடர்பாக இடம்பெற்ற கலந்துரையாடலின் போது பல பிராச்சினைகள் பொறுப்பதிகாரியினால் முன்னவக்கப்பட்டது இதனை கவனத்தில் கொண்ட அமைச்சரின் இணைப்புச் செயலாளர் ரஹ்மத் மன்சூர் நகர அபிவிருத்தி மற்றும் நீர்வழங்கல் வடிகாலமைப்பு அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று துரிதமாக தீர்வு பெற்றுதருவதாக வாக்குதியளித்தார். இதன்போது பொறியியலாளர்களும் கலந்து கொண்டனர்.
