இஸ்லாமிய எழுச்சி மாநாடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை பானகமுவையில்!

இக்பால் அலி-
மாஅத் அன்சாரிஸ் சுன்னத்தில் முஹம்மதிய்யா மற்றும் பானகமுவ ஜாமிஉத் தவஹீத் ஜும்அப் பள்ளிவாசல் ஆகிய இணைந்து நடாத்தும் வருடாந்த இஸ்லாமிய எழுச்சி மாநாடு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை 07-06-2015 அன்று மு.ப.10.30 மணி முதல் மஃரிப் தொழுகை வரை நடைபெறும்.

அஷ்ஷெய்க் ஏ. ஆர். றமழான் ரியாதி தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில் சொற்பொழிவாளர்களாக அஷ்ஷெய்க் எம்.எஸ்.எம். இம்தியாஸ் யூசுப் ஸலபி இஸ்லாமிய அகீதா பற்றிய ஒரு தெளிவு ; என்ற தலைப்பிலும் அஷ்ஷெய்க் என். பீ. ஜுனைத் மதனி இஸ்லாமிய பொருளீட்டல் முறை என்ற தலைப்பிலும் அஷ்ஷெய்க்  எம். எஸ். எம். முர்ஷித் அப்பாஸி நாகரிகம் என்னும் போர்வையில் இளைஞர்களின் சீரழிவு என்ற தலைப்பிலும் அஷ்ஷெய்க் ரஸ்மி ஷஹித் அமீனி இஸ்லாமிய திருமணமும் குடும்ப வாழ்வும் என்ற தலைப்பிலும் உரையாற்றவுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -