ஓய்வு பெற்ற அதிபர் கே.காலிதீனுக்கு சேவை நலன் பாராட்டு விழாவும்,சிறப்பு மலர் வெளியீடும்!

பி.எம்.எம்.ஏ.காதர்-

றாவூர் மாக்கான் மாக்கார் மகா வித்தியாலயத்தில் அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற அதிபர் கே.காலிதீனுக்கான சேவை நலன் பாராட்டு விழாவும்,சிறப்பு மலர் வெளியீடும் அண்மையில் பாடசாலையின் பிரதான மண்டபத்தில்; பாடசாலை அதிபர் எம்.எம்.எம்.முகைதீன் தலைமையில் நடைபெற்றது.

இதில் பிரதம அதிதியாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், உற்பத்தித்திறன் ஊக்குவிப்பு அமைச்சருமான பஷீர் சேகுதாவூத், கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான செய்யித் அலிசாஹிர் மௌலானா,எம்.எஸ்.சுபைர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

ஓய்வு பெற்ற அதிபர் கே.காலிதீனுக்கு பொன்னாடை போர்த்தி வாழ்த்துப்பத்திரம் வழங்கி கௌரவிக்கப்பட்டதுடன். பண அன்பளிப்பும் நினைவுப்பரிசுப் பொதிகளும் வழங்கப்பட்டன.


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -