சவளக்கடை பிரதேசத்தில் சிறியரக டிப்பர் வாகனம் விபத்து!

எம்.எம்.ஜபீர்-
வளக்கடை மத்தியமுகாம் வீதியின் 12 ஆம் கொளனி ஆலயடி பிரதேசத்தில் (20) சனிக்கிழமை மாலை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளதாகவும், சாரதிக்கு எதுவித ஆபத்தும் இல்லை எனவும் மத்தியமுகாம் பொலிசார் தெரிவித்தனர்.

இருவர் பயணித்த சிறியரக டிப்பர் வாகனம் சாரதியின் கவனயீனம் காரணமாக கட்டுப்பாட்டை இழந்து வீதியின் அருகிலுள்ள வாய்க்காலில் வீழ்ந்து மூழ்கியதில் சாரதிக்கு அருகில் ஆசனப்பட்டியணிந்திருந்தவர் தப்பிக்க முடியாது அவஸ்தைப்பட்டுள்ளார். இதனையடுத்து அவர் பொதுமக்களின் முயற்சியினால் மீட்கப்பட்டு மத்தியமுகாம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பயனளிக்காது கல்முனை அஷ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்றுவருகின்றார்.

இவ்வாறு தெய்வாதீனமாக உயிர் தப்பியவர் மருதமுனையை சேர்ந்த முஸ்தபா எனவும் பொலிசார் தெரிவித்தனர்.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மத்தியமுகாம் பொலிசார் மேற்கொண்டு வருகின்றனர்.(ந)




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -