உத்தேச தேர்தல் முறை திருத்தம் குறித்து பாராளுமன்றில் இரண்டு நாள் விவாதம் நடத்த கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை மாலையும் நாளை மறுநாள் காலை 9.30 தொடக்கம் 6 மணிவரையும் விவாதம் இடம்பெறும் என பிரதி சபாநாயகர் சந்திம வீரக்கொடி தெரிவித்தார்.
சபாநாயகர் சமல் ராஜபக்ஷ தலைமையில் இன்று முற்பகல் கட்சித் தலைவர்கள் கூட்டம் பாராளுமன்றில் இடம்பெற்றது.
இதன்போது உத்தேச தேர்தல் முறை தொடர்பிலும் அமைச்சர் மங்கள சமரவீர அண்மையில் வெளியிட்ட கருத்து தொடர்பிலும் விவாதம் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மங்கள சமரவீர தொடர்பான விவாதம் எதிர்வரும் புதன்கிழமை இடம்பெறவுள்ளதாக பிரதி சபாநாயகர் குறிப்பிட்டார்.(ந)
