மட்டக்களப்பில் அரச அதிகாரி (SSO ) ஒருவர் பட்டப்பகலில் சுட்டுக் கொலை



ட்டக்களப்பு மாவட்டத்தின் மண்டூர் பகுதியில் உள்ள தனது வீட்டில் வைத்து சமூக சேவை உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை 11 மணியளவில் இனம் தெரியாத நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார் .

நாவிதன்வெளிப் பிரதேச செயலகத்தில் சமூகசேவை உத்தியோகத்தராக கடமையாற்றும் மண்டூர் 1 ஆம் பிரிவில் வசிக்கும் சச்சிதானந்தம் மதிதயன் (43வயது) தான் சுகவீனம் உற்று சத்திரசிகிச்சை மேற்கொண்டு சுகவீன விடுமுறையில் தனது வீட்டில் அவர் இருந்த போது அவரைச் சந்திக்க வருபவர்கள் போன்று இருவர் மோட்டார் சைக்கிலில் வந்து அவருடன் உரையாடுவது போல் நடித்து அவரை திடிரென சுட்டுவிட்டுடு தப்பிச் சென்றுள்ளனர்,

படுகாயமடைந்த நிலையில் களுவாஞ்சிக்குடி வைத்தியசாலைக்கு எடுத்துச்செல்லும்போது மரணமடைந்துள்ளார்
இதுதொடர்பான மேலதிக விசாரணையினை வெல்லாவெளிப் பொலிஸ் பொறுப்பதிகாரி ரசிக சம்பத் தலைமையிலான குழு மேற்கொண்டு வருகின்றனர் .

மட்டக்களப்பு மாவட்டத்தில் மிக நீண்ட இடைவெளிக்கு பின் அரச அதிகாரி ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு கொல்லப் பட்ட சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளமை குறிப்பிடத் தக்கது .
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -