வித்யா கொலையை கண்டித்து காரைதீவில் ஆர்ப்பாட்டம்!

ஹாசிப் யாஸீன்-

புங்குடுதீவு மாணவி வித்யா வன்புணர்வுக்குட்படுத்தி கொலை செய்யப்பட்டதை கண்டித்து அம்பாறை மாவட்ட காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரி மாணவர்கள் இன்று (27) காரைதீவு பிரதேச செயலக முன்பாக கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது மாணவர்கள் ' அரசே மாணவர்களின் உரிமையை பாதுகாறு, குற்றவாளிகளுக்கு உடனடியாக தண்டனை வழங்கு' போன்ற கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆர்ப்பாட்டத்தின் இறுதியில் பாடசாலை மாணவர்களினால் காரைதீவு பிரதேச செயலக உத்தியோகத்தரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. /ச/


இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -