நற்பட்டிமுனை யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் நெசவு பயிற்சி நிலையம் திறந்து வைப்பு!

கலைமகன்-
ம்பாறை மாவட்டதின் நற்பட்டிமுனை பிரதேச யுவதிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் நோக்கில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் தலைவரும், அமைச்சருமான ரிசாத் பதியுதீன் அவர்களின் வழிகாட்டலில் உருவான நெசவு பயிற்சி நிலையம் அண்மையில் திறந்து வைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் செயலாளர் நாயகம் Y.L.சாஹுல் ஹமீட் பிரதம அதிதியாக கலந்துகொண்டிருந்தார். 

இந்நெசவு பயிற்சி நிலைய திறப்பு விழாவில் அகில இலங்கை மக்கள் காங்கிரசின் சர்வதேச விவகார பணிப்பாளரும், சிம்ஸ் கேம்பஸ் பணிப்பாள நாயகமுமான அன்வர் எம் முஸ்தபா, குடிசை கைத்தொழில் அதிகார சபை இணைப்பாளர் அப்துல் லத்தீப், கல்முனை மாநகர சபை உறுப்பினர் முஹம்மத் முபீத், கட்சியின் கிழக்கு மாகான இணைப்பாளரும் மைகோப் நிறுவன அதிபருமான சித்தீக் நதீர் என பலரும் கலந்து கொண்டிருந்தனர். 

அல் ஹரீம் நெசவு மற்றும் கைத்தொழில் அமைப்பின் ஏற்பாட்டில் இடம் பெற்ற இந்நிகழ்வில் ஏராளமான பொதுமக்களும் பயனாளிகளும் கலந்து கொண்டிருந்தனர்.(ந)




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -