கிழக்கு மாகாண சபை உறுப்பினர் தவம் தனது பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானம்!

றியாஸ் இஸ்மாயில்-
கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் தனது மாகாண சபை உறுப்பினர் பதவியிலிருந்து விலகுவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரியவருகின்றது.

இது தொடர்பாக இன்று இரவு அக்கரைப்பற்றில் நடைபெறவுள்ள முக்கிய ஒன்று கூடலின் போது அறிவிக்கப்படவுள்ளது.

எதிர்வரும் 15 ஆம் திகதி உள்ளுராட்சி மன்றங்கள் கலைக்கப்படும் சந்தர்ப்பத்தில் அக்கரைப்பற்று மாநகர சபைத் தேர்தலில் போட்டியிடுவதற்காகவே தமது மாகாண சபை உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக தெரியவருகின்றது.

சிறி லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக ஏ.எல்.தவம் போட்டியிடுவதன் மூலம் அக்கரைப்பற்று மாநகர சபையின் ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவதற்கான வாய்ப்பு அதிகமாக உள்ளதுஎன்பதால் இத்தீர்மானம் மேற்கொள்ளப்படவுள்ளது. மாகாண சபை உறுப்பினர் ஏ.எல்.தவம் பதவி விலகும் பட்சத்தில் அடுத்ததாக சம்மாந்துறை மாஹீர் தெரிவாக சந்தர்ப்பம் உள்ளது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -