ஜோன்ஸ்டன் பெனாண்டோவை 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு!

நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நுகர்வோர் மற்றும் உள்நாட்டு வர்த்தக முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோ எதிர்வரும் மே 11ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

சதோச நிறுவனத்தில் கொள்வனவு செய்த பொருட்களுக்கு பணம் செலுத்தாமல் 5 மில்லியன் மோசடி செய்ததாக ஜோன்ஸ்டனுக்கு எதிராக முறைப்பாடு செய்யப்பட்டது. 

இதனை அடுத்து நேற்று பொலிஸ் நிதி மோசடி தடுப்பு பிரிவில் விசாரணைக்கு அழைக்கப்பட்டு ஜோன்ஸ்டன் கைது செய்யப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தார். 

இன்று குருநாகல் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெனாண்டோவை எதிர்வரும் 11ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.(ந)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -