அப்பாவுக்கு கொடுத்த கட்டிடத்தை பலவந்தமாக வைத்திருக்கும் ஹிருணிகா!

டந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் தேர்தல் பிரச்சாரத்திற்காக 6 மாதங்களுக்கு வழங்கப்பட்ட கட்டிடம் ஒன்றை மேல் மாகாண சபை உறுப்பினர் ஹிருணிகா, திருப்பி கொடுக்காது பலவந்தமாக வைத்திருப்பதாக தெரியவருகிறது.

கொலன்னாவ வீதியில் அமைந்துள்ள கட்டிடம் ஒன்றையே ஹிருணிகா பிரேமச்சந்திர தனது அரசியல் அதிகாரத்தை பயன்படுத்தி பலவந்தமாக கைப்பற்றி வைத்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

இந்த கட்டிடம் ரொஹான் விக்ரம என்ற நபருக்கு சொந்தமானது என கூறப்படுகிறது. அவர், ஹிருணிகாவின் தாயாரது கோரிக்கைக்கு அமைய பாரத லக்ஷ்மன் பிரேமச்சந்திரவின் அரசியல் நடவடிக்கைகளுக்காக அதனை வழங்கியிருந்தார்.

2011 ஆம் ஆண்டு பிரேமச்சந்திர சுட்டுக்கொல்லப்பட்ட பின்னர், அந்த கட்டிடத்தை உரிமையாளரிடம் கொடுக்காமல் பலவந்தமாக வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -