கிழக்கு முதலமைச்சரின் செயற்பாடு தொடர்பாக அதிருப்தி!

திருமலை அஹ்மத்-

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நஸீர் அஹ்மத்தின் செயற்பாடுகள் திருகோணமலை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவுத் தளத்தை ஆட்டங்காணச் செய்து வருவதாக முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

தனது முதலமைச்சுப் பதவியைத் தக்க வைத்துக் கொள்வதற்காக அவர் திருகோணமலை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் ஆதரவாளர்களின் உணர்வுகளை மதியாது செயற்பட்டு வருவதாக அவர்மீது குற்றம் சுமத்தப் படுகின்றது.

திருகோணமலை மாவட்ட முஸ்லிம் காங்கிரஸ் மத்திய குழு உறுப்பினர்கள் அவரிடம் சில நியாயங்களை எடுத்துக் கூறியும் அவர் அவர்களை உதாசீனப்படுத்தி அனுப்பியதாகக் கூறப்படுகின்றது. இது சம்பந்தமான அடுத்த கட்ட நகர்வுகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு வருவதாக முஸ்லிம் காங்கிரஸின் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர் ஒருவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -