எஸ்.எம்.அஜூஹான்-
அட்டாளைச்சேனை ஸஹ்றா வித்தியாலயத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்களைப் பாராட்டுதலும், பாடசாலையில் நீ்ண்டகாலமாக பிரதி அதிபராகக் கடமையாற்றி ஓய்வு பெற்றுச் செல்லும் மௌலவி எம்.ஐ.எம்.ஜெலீலின் சேவைநலன் பாராட்டும் ஸஹ்றாவின் சான்று 2015 நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை(24) பாடசாலை முன்றலில் நடைபெற்றது.
வித்தியாலய அதிபர் கலிலுர் ரஹ்மான் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் பிரதம அதிதியாக அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் ஏ.எல்.எம்.காசீம் கலந்து கொண்டு சிறப்பித்தார்.
கௌரவ அதிதிகளாக அட்டாளைச்சேனை கோட்டக்கல்வி அதிகாரி ஏ.சி.கஸ்ஸாலி, உதவிக் கல்விப்பணிப்பாளர் எம்.எல்.எம்.ஜாபீர், அறபா வித்தியாலய அதிபர் ஏ.எல்.பாயிஸ் உட்பட்ட பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தின் செயலாளர்ஏ.எல். றஜ்மின், உறுப்பினர்எம்.ஐ. பிர்னாஸ்,கிராம சேவை உத்தியோகத்தர் ஜிப்ரி மற்றும் பலரும் கலந்து சிறப்பித்தனர்.
இங்கு புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த மாணவர்கள் அதிதிகளினால் பாராட்டிக் கௌரவிக்கப்பட்டதுடன் ஓய்வு பெற்றுச் செல்லும் பிரதி அதிபர் எம்.ஐ.எம்.ஜெலீல் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டார்.
மாணவர்களுக்கு கற்பித்து நெறிப்படுத்திய ஆசிரியர்களான இத்ரீசியா,ஏ.எல்.அன்சார் ஆகியோரும் நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டனர்.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)