சுனாமி நிதியத்திலிருந்து 82 பில்லியன் ரூபா மோசடி :மஹிந்தவுக்கு எதிராக முறைப்பாடு

சுனாமி நிதியத்திலிருந்து 82 பில்லியன் ரூபாவை மோசடி செய்ததாக, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவிற்கு எதிராக இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. சமூகசேவைகள் பிரதியமைச்சர் ரஞ்சன் ராமநாயக்க இந்த முறைப்பாட்டைச் செய்துள்ளார்.

குறித்த பணத்தை முன்னாள் ஜனாதிபதி தனது பெயரில் உள்ள கலாச்சார மற்றும் தர்மஸ்தாபனங்களின் பெயரில் வைப்புச்செய்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன், சுனாமியின் போது கொல்லப்பட்ட பெண்மணியின் கழுத்திலிருந்த ஆபரதணத்தை கொள்ளையடித்த நபருக்கும், சுனாமி நிதியத்தை தவறாக பயன்படுத்திய நபருக்கும் இடையில் வித்தியாசமில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்நிலையில், நகையை களவாடியவர் தண்டனையை அனுபவித்துள்ளார், ஆனால் பணத்தை திருடியவர்கள் வெளியில் சுதந்திரமாக நடமாடுவதாகவும் ரஞ்சன் ராமநாயக்க தெரிவித்துள்ளார்.
(ச)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -