மக்கள் ஆதரவினைப்பெற்ற திருகோணமலை 'ரொட்டவெவ வெல்ப் பெயா அமைப்பு'



அப்துல்சலாம் யாசீம்-

திருகோணமலை ரொட்டவெவ கிராமத்தில் பல்வேறு சமூக சேவைகளை செய்து வரும் 'ரொட்டவெவ வெல்ப் பெயா அமைப்பு' அப்பிரதேச மக்கள் மத்தியல் நல்ல ஆதரவினைப்பெற்று வருகிறது.

இவ்வமைப்பின் சமூக சேவையினை மேலும் ஊக்கப்படுத்தும்வகையில் அதன் உறுப்பினர்களுக்கு சீருடைகள் வழங்கிவைக்கப்பட்டன. திருமலைச் செய்தியாளா் அப்துல் சலாம் யாசிம் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.

இவ்வமைப்பு அப்பிரதேசத்தில் ஒரு முன்மாதிரியான அமைப்பாக பல்வேறு சமூக சேவைகளைச் செய்து வருகிறது இதனால் இப்பிரதேச மக்களின் சிறப்பான வரவேற்பும் ஒத்துழைப்பும் இவ்வமைப்புக்கு கிடைத்துள்ளது.

இன-மத பேதமின்றி அனைவருக்கும் சமமாக இவ்வமைப்பு சேவையாற்றும் என அவ்வமைப்பின் செயலாளர் ஹனீப் சிபான் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -