முழுமையாக முகத்தை மறைக்கும் தலைக் கவசங்களுக்கு தடை விதிக்கப்படுமாயின் அதற்கு முன்னர் முஸ்லிம் பெண்கள் அணியும் பர்தா, நிகாப் உடைகளுக்கு தடை விதிக்கப்படவேண்டும். என தெரிவிக்கும் ஞானசார தேரர் முகம் மூடிய முஸ்லிம் உடைகளுக்கு தடை விதிக்காதவரை யாரும் தலைக்கவச சட்டத்தினை பின்பற்ற வேண்டாம் எனவும் குறிப்பிட்டார்.
பொது பலசேனா பெளத்த அமைப்பினால் நேற்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது ஊடகவியலாளர் ஒருவரால் தலைக்கவச சட்டம் தொடர்பில் வினவியபோது அவ் அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிட்டதாவது.
தேசிய பாதுகாப்பு தொடர்பில் நாம் கடந்த இரண்டு ஆண்டுகளாக பேசி வருகின்றோம். ஆனால் இன்று புதிய அரசு விசித்திரமான சட்டங்களை கொண்டு வந்து தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துகின்றது. முழுமையாக முகத்தை மூடிய தலைக்கவசம் அணிவதை தடுக்க வேண்டும் எனக் கோரி புதிய சட்டம் இயற்றியுள்ள இவர்கள் ஏன் முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடி அணியும் நிகாப், பர்தா உடைகளுக்கு தடைவிதிக்கவில்லை. தலைகவசம் அணிந்து தப்பு செய்கிறவர் யார் என்பதை கவசத்தை கழட்டி பார்க்க முடியும். ஆனால் நிகாப் பர்தா உடைகளினுள் இருப்பர்கள் யார் என்பதை எவ்வாறு அவதானிப்பது.
கடந்த காலங்களில் இவ்வகையான ஆடைகளை பயன் படுத்தியே இலங்கையில் பல குற்றங்கள் இடம்பெற்றன. மாமா, அஸ்மின் போன்ற குற்றவாளிகள் இவ்வகை உடையினுள் ஒளிந்திருந்தே தப்பித்து வந்தனர். எனவே தலைக்கவசம் தொடர்பில் சட்டம் கொண்டுவந்து முழுமையாக முகத்தை மூடிய தலைக்கவசம் அணிவதை தடை செய்வதாயின் அதே சந்தர்ப்பத்தில் முஸ்லிம் பெண்கள் அணியும் புர்கா, பர்தா வகை உடைகளையும் தடை செய்து பாதுகாப்பினை உறுதிப்படுத்தவேண்டும்.
சட்டம் என்பது அனைவருக்கும் அனைத்து வகையிலும் பொருந்தக் கூடிய வகையில் அமையப்பெற வேண்டும். மத சார்பில் ஒரு சிலருக்கு சாதகமாகவும் ஏனையோருக்கு வேறு விதத்தில் சட்டம் இயற்றுவது ஏற்றுக் கொள்ள முடியாது.
முஸ்லிம் தீவிரவாதத்திற்கு முன்னுரிமை கொடுத்து நாட்டை சிறிது காலத்திலேயே இஸ்லாமிய தேசமாக்கும் செயற்பாடு மறைமுகமாக இடம்பெற்றுக்கொண்டிருக்கின்றது. பிரபாகரன் வடக்கை மட்டுமே கோரி போராடினார்.
ஆனால் முஸ்லிம் தீவிரவாதம் மிகவும் மோசமாக அமைதியாக இருந்து காய் நகர்த்தி முஸ்லிம் மத வாதத்தினையும் யதார்த்தத்திற்கு அப்பாற்பட்ட கொள்கைகளையும் பரப்பி சிங்கள கொள்கைகளை அழிக்கின்றனர்.
எனவே முகத்தினை முழுமையாக மூடு வதை தடைசெய்யும் சட்டம் கொண்டு வரப்படுமாயின் முஸ்லிம் பெண்களின் முகத்தை மூடிய ஆடைகளையும் தடை செய்ய வேண்டும். அதை நடைமுறைப் படுத்தும் வரையில் இளைஞர்கள் யாரும் இச் சட்டத்தினை பின்பற்ற வேண்டாம் எனவும் அவர் தெரிவித்தார்.
(Kesari)