வெலியோயா பரணகம பிரதேசத்தில் கஜபாபுர பாடசாலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பு!

பாறுக் சிகான்-
முல்லைத்தீவு மாவட்டத்தின் வெலியோயா பரணகம பிரதேசத்தில் அமைந்துள்ள கஜபாபுர பாடசாலை உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது.

இப்பாடசாலையின் கட்டடத்தை வட மாகாண சபை உறுப்பினர்களாக ரிப்கான் பதியுதீன் மற்றும் ஜெயதிலக ஆகியோர் இணைந்து திறந்து வைத்தனர்.

இதன் போது அதிபரின் வேண்டு கோளுக்கு அமைய பாடசாலையின் மின்சார வசதிக்கான ஏற்பாடுகளும் மாகாண சபை உறுப்பினர்களால் சொந்த நிதியில் இருந்து பெற்றுக் கொடுக்கப்பட்டுள்ளது.

இது தவிர இப்பாடசாலை நிர்மாணிப்பிற்கான முயற்சியினை அமைச்சர் ரிசாட் பதியுதீன் மேற் கொண்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

மேலும் இப் பாடசாலைக்கு தேவையான வசதிகள். குறை நிறைகளை கேட்டறிந்த ரிப்கான் பதியுதீன் இனி வரும் காலங்களில் குறித்த பாடசாலை குறித்து விசேட கவனம் செலுத்துவதாக பாடசாலை சமூகத்திடம் தெரிவித்தார்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -