மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிள் மின் கம்பத்துடன் மோதியதில் இருவர் மரணம்!

செய்யித் அப்ஷல்,த.நவோஜ-
ட்டக்களப்பு மாவட்டம் வாழைச்சேனைப் பொலிஸ் பிரிவிலுள்ள கிரான் சந்தியில் இடம்பெற்ற வீதி விபத்தில் இருவர் ஸ்தலத்திலேயே கொல்லப்பட்டதாக வாழைச்சேனைப் பொலிஸார் தெரிவித்தனர்.

கிரான் பகுதியைச் சேர்ந்த எஸ். ஆதித்தன் (வயது 36) மற்றும் விநாயகம் ஜெயபிரதாப் (வயது 24) ஆகிய இருவருமே பலியாகியுள்ளனர்.

கொழும்பு மட்டக்களப்பு நெடுஞ்சாலையில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் வேக கட்டுப்பாட்டை மீறி கிரான் பாடசாலைக்கு எதிரில் வீதி ஓரத்தில் இருந்த மின் கம்பம் மீது மோதியதாலேயே விபத்து சம்பவித்துள்ளது.

இரண்டு பேரினது சடலங்களும் தற்போது வாழைச்சேனை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

விபத்துச் சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளில் ஈடுபட்டுள்ளனர்.









இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -