கிழக்கு மாகாணத்தில் உள்ள பிரதேச சபைகளுக்கான புதிய கட்டிடங்கள் அமைக்கப்பட்டுக் கொண்டிருக்கின்ற இக்காலத்தில் பிரதேச சபைகளின் ஆட்சி முடிவுறும் இறுதிக்காலமாக இருக்கின்ற இவ்வேளையில் மூதூர் பிரதேச சபையின் திறப்பு விழா இன்று இடம்பெற்றது.
இன்று 30 மூதூர் பிரதேச சபையின் புதிய கட்டிடம் திறக்கும் நிகழ்வு பிரதேச சபையின் தவிசாளர் ஏ.ம்.ஹரீஸ் தலைமையில் காலை 10.30 மணிக்கு இடம்பெற்றது.
இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஹாபிஸ் நஸீர் அஹமட், கெளரவ அதிதியாக போக்குவரத்து பிரதி அமைச்சர் எம்.எஸ்.தெளபீக், மற்றும் கிழக்கு மாகாண சபை உறுப்பினர்களான ஜே.எம்.லாஹிர் இவர்களுடன் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் எம்.வை.சலீம், பிரதேச சபையின் உறுப்பினர்கள், அரசாங்க அதிகாரிகள் ,பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.
40 மில்லியன் ரூபா நிதியில் அமைக்கப்பட்ட இப்பிரதேச சபை கட்டிடமானது புரநெகும திட்டத்தினால் கொண்டு வரப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.
.jpg)
.jpg)
.jpg)
%2B-%2BCopy.jpg)
.jpg)
%2B-%2BCopy.jpg)
%2B-%2BCopy.jpg)
%2B-%2BCopy.jpg)
%2B-%2BCopy.jpg)
%2B-%2BCopy.jpg)
.jpg)
%2B-%2BCopy.jpg)
%2B-%2BCopy.jpg)
.jpg)
%2B-%2BCopy.jpg)