உலக வங்கியின் இலங்கைக்கான நிபுணர்கள் குழு கல்குடா கல்வி வலயத்திற்கு நேரடி விஜயம்!

த.நவோஜ்,ந.குகதர்சன்-
லக வங்கியின் இலங்கைக்கான நிபுணர்கள் குழு வியாழக் கிழமையன்று கல்குடா கல்வி வலயத்திற்கு நேரடி விஜயமொன்றினை மேற்கொண்டிருந்தனர். இதன்போது பேத்தாழை சந்திரகாந்தன் வித்தியாலயத்திற்கு வருகை தந்திருந்தனர்.

பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பான செயற்பாடுகள், பாடசாலை மட்ட ஆசிரியர் அபிவிருத்தி மாணவர்களுக்கான கல்வி தொடர்பான உபகரணங்கள் கையாள்தல் பயிற்சிகள் செய்தல், ஆசிரியர்களினால் மாணவர்களுக்கான கற்பித்தல் முறைகள் சரியாக பின்பற்றப்படுகின்றதா என்பன போன்ற பல விடயங்களை பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களுடன் நிபுணர்கள் குழு கலந்துரையாடல்களை மேற்கொண்டு கள ஆய்வுகளை பின்பற்றியிருந்தனர்.

இவ் நிபுணர்கள் குழுவானது அன்றைய தினம் வலயத்திலுள்ள பல கனிஸ்ட பாடசாலைகளுக்கு நேரடியாக சென்று மாணவர்களின் எதிர்கால கல்வி தொடர்பானதும் பாடசாலையின் அபிவிருத்தி தொடர்பாவும் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தனர்.

இதில் குறிப்பாக கிரான் விவேகானந்த வித்தியாலயம், கிண்ணையடி சரஸ்வதி வித்தியாலயம், செங்கலடி விவேகானந்த வித்தியாலயம், பறங்கியாமடு பாரதி வித்தியாலயம் போன்ற பாடசாலைகளுக்கும் சென்றதுடன், கல்குடா வலய கோட்ட கல்விப் பணிப்பாளர் பணிமனையினையும் சென்று பார்வையிட்டுச் சென்றுள்ளனர். 

உலக வங்கியானது கடந்த வருடம் பாடசாலை கல்வி செயற்பாடு தொடர்பான விடயங்களுக்கு பல்வேறுபட்ட திட்டங்களுக்கு நிதி உதவியினை வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

எதிர்காலத்திலும் இவ்வாறான செயற்பாடுகளுக்கு மாகாண கல்விப் பணிமனையின் ஊடாக நிதி வசதி வழங்கக் கூடிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று வருகை தந்த பிரதி நிதிகள் தெரிவித்துள்ளதாக வலயக் கல்விப் பணிமனை உயர் அதிகாரிகள் கருத்து தெரிவித்தனர்.

இதன்போது கல்குடா வலயக் கல்வி பிரதிக் கல்விப் பணிப்பாளர்களான தி.ரவி, திருமதி.சுஜாத்தா குலேந்திரகுமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.





இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -