ஜேர்மனியில் முஸ்லிம் ஆசிரியைகள் ஹிஜாப் அணியத் தடையில்லை

ஜேர்மனியில் முஸ்லிம் ஆசிரியைகள் ஹிஜாப் அணியத் தடையில்லை என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.

ஜேர்மனியில் முஸ்லிம் பெண்கள் ஹிஜாப்(முகம் தெரியும்படியாக அணியும் முக்காடு) அணிவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது.

இதனால் முஸ்லிம் ஆசிரியை ஒருவரின் வேலை விண்ணப்பம் தோல்வியடைந்துள்ளதாக கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அந்த ஆசிரியை தொடர்ந்த வழக்கு நீதிமன்ற விசாரணைக்கு வந்தது.

அப்போது பேசிய நீதிபதி, குழப்பத்தை ஏற்படுத்தும் உறுதியான நிலைமை இருந்தால் மட்டுமே மத அடையாளங்களை தடைசெய்ய முடியும்.

ஆனால் ஹிஜாப் அணிவதன் மூலம் பிரச்சனைகள் ஏற்படுவதில்லை என்பதால், அதற்கு அனுமதியளிக்கப்படும் என தீர்ப்பளித்துள்ளார்.

இதுகுறித்து அந்நாட்டின் பசுமை கட்சியின் பேச்சாளர் ஒருவர் கூறுகையில், பன்முகத் தன்மையை எதிர்ப்பவர்களை விட, முக்காடு அணிவது ஜேர்மனிய சமூகத்துக்கு பெரிய பாதிப்பாக அமையாது என்றும் நீதிமன்றத்தின் தீர்ப்பு மத சுதந்திரத்துக்கான நன்னாள் எனவும் கூறியுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -