அக்கரைப்பற்று மாநகர சபை யினால் திறந்து வைக்கப்பட்ட 12வீதிகளினுடைய பெயர் பலகைகள் சுமார் மூன்று லட்சம் பெறுமதியான வை உடைத்து சிலரது வழிகாட்டலில் காடைக்கும்பலினால் களவாடப்பட்டமை தொடர்பில் மாநகர சபை யினால் பொலிசில் முறையிடப்பட்டு சாட்சியமளிக்கப்பட்டு மூன்று கிழமை கடந்த நிலையில் குறித்த சந்தேக நபர்களை நீதிமன்றில் சமர்ப்பிக்காமை குறித்து மிகுந்த கவலையடையும் அதே வேளை குறித்த சம்பவம் தொடர்பில் மக்கள் பிரதிநிதி என்கின்ற அடிப்படையில் கெளரவ ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ்மாஅதிபர் ஆகியோருக்கு விசாரணை யை துரிதப்படுத்தி நீதி நியாயங்கள் வெளிக்கொணர வழியேற்படுத்தி தருமாறு வேண்டிக் கொள்வதுடன் பகல் பொழுதில் பல்லாயிரக்கணக்கான மக்கள் முன்னால் சேதமாக்கப்பட்ட பொதுத்சொத்து தொடர்பாக துரித விசாரணை யை அக்கரைப்பற்று பொலிசார் மேற்கொள்ளவேண்டும்.
(கீழே குறிப்பிடப்பட்டிருக்கும் புகைப்படங்கள் வீதி திறப்பின்போது பெறப்பட்டவை) இவ்வாறான மோசமான செயற்பாடுகள் குறித்து மு. கா. வின் அம்பாரை மாவட்ட மத்திய குழு கூட்டத்தில் ஆசிரியர் ஒருவரால் விசனம் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.
அஸ்மி கபூர் மாநகர சபை உறுப்பிப்பினர்.