இலங்கையின் 67வது சுதந்திர தினத்தையொட்டி மருதமுனையில் புதிதாக அங்குரார்ப்பணம் செய்யப்பட்டுள்ள சுகாதாரத்திற்கும், கல்விக்குமான ஒத்துழைப்பு பேரவையின் ஏற்பாட்டில் பாடசாலை மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கிய நிகழ்வு இன்று (04-02-2015)பெரிய நீலாவணை புலவர்மணி ஷரிபுத்தீன் வித்தியாலய மண்டபத்தில் பேரவையின் ஸ்தாபக தலைவரும் சப்ரகமுவ பல்கலைக்கழகத்தின் பதிவாளருமான எம்.எப்.ஹிபத்துல் கரீம், தலைமையில் நடைபெற்றது.
இதில் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.ஏ.நுபைல், கல்முனை பிரதேச திவிநெகும அதிகாரி ஏ.ஆர்.எம்.சாலிஹ், ஆசியாமன்றத்தின் நிகழ்ச்சித்திட்ட அதிகாரி எம்.ஐ.எம்.வலீத், கிழக்குப் பல்கலைக்கழக உதவிப்பதிவாளர் எம்.எப்.மர்சூக், ஆகியோருடன் அதிபர்களான ஏ.ஆர்.நிஃமத்துல்லா, எம்.ஏ.எம். இனாமுல்லா, ஏ.எம்.ஜிப்ரி ஆகியோரும், ஆசிரியர்கள், பழைய மாவர்களும் கலந்து கொண்டனர்.
இங்கு 36 ஆண்.பெண் மாணவர்களுக்கு பாதணிகள் வழங்கப்பட்டன.
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)
.jpg)