விவசாயத்துறை அமைச்சராக பிள்ளையான் நியமனம்?

கிழக்கு மாகாண சபையின் விவசாயத்துறை அமைச்சராக முன்னாள் முதலமைச்சர் சிவநேசத்துறை சந்திரிகாந்தன் நியமிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது. அரசாங்கத் தரப்பு தகவல்கள் இதனைத் தெரிவிக்கின்றன.

இது தொடர்பில் பிள்ளையானும், அவருடன் புதிதாக இணைந்துள்ள இனியபாரதியும் நேற்று ஜனாதிபதியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தனர்.

கிழக்கில் முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்புடன் இணைந்து ஆட்சி ஏற்படுத்தியுள்ள நிலையில், தமிழர் ஒருவருக்கு அமைச்சுப் பதவியை வழங்கி நல்லெண்ணத்தை வெளிப்படுத்த வேண்டும் என்று அடிப்படையில் பிள்ளையானுக்கு அமைச்சுப் பொறுப்பை வழங்க முன்வந்துள்ளதாக கூறப்படுகிறது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -