பாறூக் சிஹான் -
நந்திக்கடல் பிரதேசத்தில் தற்போது இறால் சீசன் இடம்பெறுவதால், வட்டுவாகல் நந்திக்கடல் பகுதியில் இரவு வேளைகளில் தடை செய்யப்பட்ட தங்கூசி வலை, கூட்டு வலை, படுப்பு வலைகள் பயன் படுத்தி மீன் மற்றும் இறால் பிடியில் ஈடுபடுவதாக அங்குள்ள மக்கள் வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களுக்கு முறைப்பாடு வழங்கியுள்ளனர்.
எனவே முல்லைத்திவு மாவட்ட சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடன் இவ்விடயங்களை கருத்தில் கொண்டு தடை செய்யப்பட்ட தொழில் முறைகளை கையாண்டு எமது கடல் வளத்தையும் சுரண்டுகின்ற எவருக்கும் இடம் கொடாது உடன் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் பணித்துள்ளார்.
ஒரு சிலரது சுயநலத்துக்காக எமது கடல் வளத்தை அளிக்க முடியாது என்றும் சட்டத்தின் முன் யாவரும் ஒருவரே என்பதையும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -