அமெரிக்க பிரதி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் முஸ்லிம் காங்கிரஸ் பிரதிநிதிகளுடன் சந்திப்பு!

அஸ்லம் எஸ்.மௌலானா-

லங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க பிரதி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீமை இன்று செவ்வாய்க்கிழமை மதியம் சந்தித்து கலந்துரையாடினார். 

அமைச்சர் ஹக்கீமின் இல்லத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் மு.கா. செயலாளர் நாயகமும் சுகாதார ராஜாங்க அமைச்சருமான எம்.ரி.ஹசன் அலி, பிரதிச் செயலாளர் நாயகமும் கல்முனை முதல்வருமான எம்.நிஸாம் காரியப்பர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது ஆட்சி மாற்றத்தின் பின்னரான நாட்டு நிலைமைகள் குறித்து அமெரிக்க பிரதி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் அமைச்சர் ஹக்கீம் உள்ளிட்ட மு.கா. பிரதிநிதிகளிடம் கேட்டறிந்து கொண்டார்.

அதேவேளை நல்லாட்சிக்காக மேற்கொள்ளப்படவுள்ள அரசியல் யாப்பு சீர்திருத்தங்கள் குறித்து அமைச்சர் ஹக்கீமின் வேண்டுதலின் பேரில் மு.கா. பிரதிச் செயலாளர் நாயகம் சட்டமுதுமாணி எம்.நிஸாம் காரியப்பர், அமெரிக்க பிரதி ராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வாலுக்கு விளக்கிக் கூறினார்.

இதனைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த நிஷா பிஸ்வால்; இத்திட்டங்கள் நாட்டு மக்களின் ஆதரவுடன் நிறைவேற்றப்பட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதுடன் இலங்கையின் நல்லாட்சிக்கும் பொது நல விடயங்களுக்கும் அமேரிக்கா முழுமையான ஒத்துழைப்பு வழங்கும் எனக் குறிபிட்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -