நிந்தவூரில் இடம்பெற்ற 67வது சுதந்திர தின நிகழ்வுகள்!

சுலைமான் றாபி-
லங்கையின் 67வது சுதந்திர தினத்தினை முன்னிட்டு இன்று (04) இரு வெவ்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன. அந்தவகையில் நிந்தவூர் பிரதேச சபை ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வுகள் அதன் தவிசாளர் எம்.ஏ.எம்.தாஹிர் தலைமையில் நிந்தவூர் பிரதேச சபையில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ரி. ஜப்பார் அலி, ஏ.எம்.நௌசாத்,எஸ்.ஐ.எஸ்.எம்.றியாஸ், எம்.கலந்தர், பிரதேச சபையின் எதிர்கட்சித்தலைவர் வை.எல்.சுலைமாலெவ்வை மற்றும் பிரதேச சபையின் செயலாளர் எம்.ஜௌபர் மற்றும் அதன் உத்தியோகத்தர்கள் அனைவரும் கலந்து சிறப்பித்ததோடு, சுதந்திர தினத்தினை முன்னிட்டு பிரதேச சபையினரால் மரங்களும் நடப்பட்டன. 

இதேவேளை நிந்தவூர் பிரதேச செயலகம் ஏற்பாடு செய்த சுதந்திர தின நிகழ்வுகள் நிந்தவூர் பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் திருமதி ஆர்.யு. அப்துல் ஜலீல் அவர்களின் தலைமையில் கொண்டாடப் பட்டது. 

இந்நிகழ்வில் உதவிப் பிரதேச செயலாளர் ஆர். திரவியராஜ் உட்பட அலுவலக அதிகாரிகளும், உத்தியோகத்தர்களும் கலந்து சிறப்பித்தனர். மேலும் இந்நிகழ்வில் பிரதேச செயலாளர் ஹாஜியாணி ஆர்.யு. அப்துல் ஜலீல் அவர்களின் விஷேட சுதந்திர தின உரையும் இடம்பெற்றது குறிப்பிடத்தக்கதாகும்.




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -