கல்முனை சாஹிராவில் இரத்தம் வழங்கி சுதந்திரம் கொண்டாட்டம்




எம்.வை.அமீர் எம்.ஐ.சம்சுதீன்-

லங்கையின் 67வது சுதந்திரதின கொண்டாட்டங்கள், ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களின் வேண்டுதலின் பேரில், நாட்டின் பல்வேறு பாகங்களிலும் எளிமையான முறையில் கொண்டாடப்பட்டன.

சுதந்திரதின நிகழ்வுகள் கல்முனையின் பல பிரதேசத்திலும் இடம்பெற்றது. கல்முனையில் பிரதான நிகழ்வாக சாஹிரா தேசிய பாடசாலையில் இடம்பெற்றது. இரண்டு சுற்றுக்களாக இடம்பெற்ற குறித்த நிகழ்வு பாடசாலையின் அதிபர் பி.எம்.எம்.பதுர்தீன் தலைமையில் தேசிய கொடி ஏற்றி வைக்கப்பட்டதுடன் ஆரம்பிக்கப்பட்டது. 

பின்னர் பாடசாளைக்கொடி ஏற்றப்பட்டதுடன் புதிதாக தெரிவு செய்யப்பட்டுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேன அவர்களுக்காகவும் நாட்டுக்காகவும் துஆ பிரார்த்தனையும் இடம்பெற்றது. சுதந்திர தினத்தை முன்னிட்டு சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக்கிளையின் தலைவர் டாக்டர் சனுஸ் காரியப்பர் அவர்களால் மரக்கண்டு ஒன்றும் நாட்டி வைக்கப்பட்டது.

நிகழ்வின் இரண்டாவது சுற்றாக சொற்பொழிவும் இரத்ததான நிகழ்வும் இடம்பெற்றது. இந்நிகழ்வுக்கு கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் பிராத்தித் தலைவர் சாய்ந்தமருது மாவட்ட வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரீப் அவர்கள் தலைமைவகித்தார். இங்கு பாடசாலையின் அதிபர் பி.எம்.எம்.பதுர்தீன், கல்முனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிA.W.கப்பார்,சாய்ந்தமருது பிரதேச செயலாளர் ஏ.எல்.எம்.சலீம்,சாய்ந்தமருது மாளிகைக்காடு பள்ளிவாசல்களின் தலைவர் வை.எம்.ஹனீபா, சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக்கிளையின் தலைவர் டாக்டர் சனுஸ் காரியப்பர், கல்முனை அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பதில் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாகிர், உட்பட பல அதிதிகளும் பாடசாலையின் அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் மாணவர்களும் கலந்து கொண்டனர்.

இரத்ததான நிகழ்வு அஸ்ரப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் பதில் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.சீ.எம்.மாகிர் அவர்களது பங்கு பற்றுதலுடன் டாக்டர்,எம்.ரீ.என்.சிபாயா,டாக்டர் கே.டீ.டீ.நடீஜா போன்றோரது மேற்பார்வையில் இடம்பெற்றது. உத்தியோகபூர்வமாக சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் கொழும்புக்கிளையின் தலைவர் டாக்டர் சனுஸ் காரியப்பர் மற்றும் கல்முனை சாஹிரா தேசிய பாடசாலையின் பழைய மாணவர் சங்கத்தின் பிராத்தித் தலைவர் சாய்ந்தமருது மாவட்ட வைத்திய சாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் என்.ஆரீப் அவர்களது மணைவி திருமதி கலிதா ஆரீப் ஆகியோர் தங்களது இரத்தங்களை வழங்கிவைத்தது ஊடாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.

இங்கு பெரும் திரளானோர் தங்களது இரத்தங்களை வழங்கி சுதந்திரத்தை மகிழ்வுடன் கொண்டாடியது குறிப்பிடத்தக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -