ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த ஓட்டமாவடி இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி மரணம்!

த.நவோஜ்-
வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் ஓட்டமாவடி காவத்தமுனை ஆற்றில் நீராடிக் கொண்டிருந்த இளைஞர் ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளதாக வாழைச்சேனை பொலிஸார் தெரிவித்தனர்.

ஓட்டமாவடி காவத்தமுனை மில்லத் வித்தியாலய வீதியைச் சேர்ந்த  'பதுர்தீன் இஸ்ஹாக்' (வயது 13) என்பவரே இவ்வாறு உயிர் இழந்தவர் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் ஓட்டமாவடி காவத்தமுனை ஆற்றங்கரையோரம் நண்பர்களுடன் விளையாடிக் கொண்டிருந்த குறித்த இளைஞர் நீராடுவதற்காக ஆற்றில் இறங்கிய சமயமே நீரில் மூழ்கி உயிர் இழந்துள்ளார்.

சடலம் வாழைச்சேனை ஆதார வைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டு வாழைச்சேனை நீதவான் நீதிமன்ற பதில் நீதிபதி எம்.பி.எம்.ஹுஸைன் முன்னிலையில் விசாரணைகள் இடம்பெற்றதன் பின்னர் சடலம் உறவினர்களிடம் ஞாயிற்றுக்கிழமை இரவு ஒப்படைக்கப்பட்டது.

இச்சம்பவம் தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -