த.நவோஜ்-
மட்டக்களப்பு மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வாகரைப் பிரதேசத்தில் மிகவும் வறிய கிராமமான இறாலோடை கிராம மக்களுக்கு அவுஸ்ரேலியா தமிழ் இன்ஜினியர் பவுன்டேசன் அமைப்பின் நிதி உதவி மூலம் மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக புதன்;கிழமை மாலை உணவுப் பொருட்கள் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் உதவிப் பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை ஊடாக வழங்கப்பட்ட உதவிப்; பொருட்களை மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை தலைவரும், தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான சீனித்தம்பி யோகேஸ்வரன் நேரடியாக சென்று வழங்கி வைத்தனர்.
இதன்போது பேரவை பிரதி நிதிகள் மற்றும் பல பொதுமக்கள் கலந்து கொண்டனர். இப் உணவுப் பொதியில் அரிசி, சீனி, தேயிலை, கோதுமை மா, பருப்பு உட்பட்ட பொருட்களை அடங்கியதாக 154 உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
வாகரைப் பிரதேசத்தில் மிகவும் வறிய கிராமமாக காணப்படும் வட்டவான் கிராம மக்களுக்கு இவ்உதவியை வழங்கியமைக்காக மட்டக்களப்பு மாவட்ட இந்து இளைஞர் பேரவை அவுஸ்ரேலியா தமிழ் இன்ஜினியர் பவுன்டேசன் அமைப்பின் நிருவாகத்தினருக்கு நன்றியை தெரிவிக்கின்றனர். அத்தோடு இவ் உதவியை பெற்ற மக்களும் தமது நன்றிகளை தெரிவித்தனர்.