கமலேஷ் சர்மா இலங்கைக்கு விஜயம்!

பொதுநலவாய செயலாளர் நாயகம் கமலேஷ் சர்மா இன்று சனிக்கிழமை இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார்.

மூன்றுநாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக இலங்கை வரும் அவர், நாட்டின் புதிய ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை சந்தித்து கலந்துரைடலில் ஈடுபடவுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

இதுதவிர அவர் பிரதமர், வெளிவிவகார அமைச்சர் ஆகியோரையும் சந்தித்து பொதுநலவாயத்தின் முன்னுரிமை தொடர்பில் மற்றும் நாட்டின் தேசிய முன்னுரிமைக்குரிய விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நவம்பர் மாதம் மோல்ட்டாவில் நடைபெறவுள்ள பொதுநலவாய நாடுகள் மாநாடு தொடர்பில் தற்போதைய தலைவர் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை சந்திக்க தான் தீர்மானித்துள்ளதாகவும் கமலேஷ் சர்மா தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -