கனம் நீதிபதி அவர்களே! இந்த வழக்கின் சந்தேக நபர்களுக்கு கமையான தண்டனைகள் வழங்க வேண்டாம். ஏனென்றால் இந்த நாட்டில் நல்லாட்சி உருவாவதற்கு இவர்கள்தான காரணமாக இருந்திருக்கிறார்கள்.
இவர்களது கடும் போக்கினால்தான் இது சாத்தியமானது என பொதுபல சேனா அமைப்பின் செயலாளரான கலகொட அத்தே ஞானசார தேரர் பிரதிவாதியாக ஆஜராகியிருந்த வழக்கின் போது சட்டத்தரணியான சிராஸ் நூர்தீன் நீதிவானைக் கேட்டுள்ளார்.
கொழும்பு நிப்பன் ஹோட்டலில் நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஒரு கூட்டத்துக்குத் தடை ஏற்படுத்தியாக தெரிவித்து தொடரப்பட்டிருந்த வழக்கு விசாரணைகளின போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
சட்டத்தரணியால் நீதிவானிடம் இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்ட போது கலகொடஅத்தே ஞானசார தேரர் தலைகுனிந்து அமைதியாக இருக்க, அங்கிருந்தவர்கள் மௌனமாகச் சிரித்துக் கொண்டனர்.
