கிழக்கில் ஆட்சி அமைக்க தமிழ்த் தேசியகூட்டமைப்புக்கு அழைப்பு-அமைச்சர் ஹக்கீம்!

பி.எம்.எம்.ஏ.காதர்-
ன்னும் 72 மணித்தியாலங்களுக்குள் கிழக்கு மாகாண முதலமைச்சரை ஸ்ரீலங்கா முஸ்லீம் காங்கிரஸ் நியமிக்கும் இதற்கான இணக்கப்பாட்டை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கொண்டுள்ளார் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசியத் தலைவரும், நகர அபிவிருத்தி மற்றும் தேசிய நீர்வழங்கள் அமைச்சருமான றஊப் ஹக்கீம் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் அம்பாறை மாவட்ட செயற்குழுக்கூட்டம் இன்று(31-01-2015)மருதமுனை கலாசார மத்திய நிலைய மண்டபத்தில் நடைபெற்றது.இதில் பிரதம அதிதியாக்கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர்; றஊப் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.

கட்சியின் சிரேஸ்ட பிரதித் தலைவரும்,கல்முனை மாநகர சபையின் பிரதி முதல்வருமான ஏ.எல்.அப்தல் மஜீட் தலைமையில் இந்த செயற்குழுக் கூட்டம் நடைபெற்றது.இங்கு அமைச்சர் றஊப் ஹக்கீம் மேலும்; உரையாற்றுகையில் தெரிவித்ததாவது:- 

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் கிழக்கு மாகாணத்தில் அமைக்கப்போகின்ற ஆட்சியில் தமிழ் தேசியக்கூட்டமைப்பு உள்ளிட்ட அனைத்துக்கட்சிகளையும் சார்ந்த பிரதிநிதிகளையும் இணைத்து ஒரு நல்லாட்சியை ஏற்படுத்த முயற்சிக்கின்றோம்.

மக்களுக்கான இந்த நல்லாட்சியில் எல்லாக் கட்சிகளும் சார்ந்த பிரதிநிதிகளும் பூரண ஒத்துளைப்பை வழங்க முன்வரவேண்டும் நடக்கின்ற 100 நாள் வேலைத்திட்டத்தில் எல்லாவிடையங்களையும் 100 நாட்களுக்குள் செய்து விடமுடியாது. 

நடைபெறவுள்ள பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுக்கக்கூடிய வகையில் எமது கட்சிப்பணிகளை தரிதப்படுத்தி கட்சிக்கிளைகளை புனரமைத்து நமக்குள் ஸ்தீரத்தன்மையை ஏற்படத்த வேண்டும் என அமைச்சர் றஊப் ஹக்கீம் மேலும் தெரிவித்தார்.










இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -