ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான மேலும் 65 வாகனங்களைத் தேடி குற்றப்புலனாய்வுத் திணைக்களம் தொடர்ந்தும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
இதன்பொருட்டு விசேட பொலிஸ் குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும், சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகருமான அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்.
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான 749 வாகனங்கள் காணாமற் போயிருந்ததாக பதிவாகியுள்ளது.
அவற்றுள் 80 க்கும் அதிகமான வாகனங்கள் மீட்கப்பட்டுள்ளதாக நாட்டின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து கடந்த நாட்களில் மீட்கப்பட்டிருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஜனாதிபதி செயலகத்திற்கு சொந்தமான வாகனங்கள் மறைத்து வைக்கப்பட்டிருக்கும் நிலையில் பொலிஸாரால் மீட்கப்படுமாயின், அதுதொடர்பான நீதிமன்ற நடவடிக்கைகள் நிறைவடையும் வரை சந்தேகநபர்களுக்கு பிணை வழங்கப்பட மாட்டாது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.