உண்மையான சுதந்திரம் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கிடைக்கவில்லை-அசாத் சாலி

லங்கைக்கு உண்மையான சுதந்திரம் 1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 4 ஆம் திகதி கிடைக்கவில்லை எனவும் கடந்த 9 ஆம் திகதியே நாட்டுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்ததாகவும் தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பேசும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

நாட்டின் இன்றைய ஜனாதிபதி வீதி சமிக்ஞை சட்டங்களை பின்பற்றி வாகனத்தில் செல்லும் தலைவர்.

ஜனாதிபதி பயணிக்கும் வீதிகளை இனிமேல் மூட வேண்டிய அவசியமில்லை. பல வருடங்களாக மூடப்பட்டிருந்த வீதிகள் தற்போது திறக்கப்பட்டுள்ளன. இதுவே உண்மையான சுதந்திரம் எனவும் அசாத் சாலி குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -